search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது " கடல் சீற்றம்"

    • வங்கக்கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.
    • வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் நீர் மட்டம் தாழ்வு, சீற்றம், உள்வாங்குதல் போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்று பவுர்ணமி என்ற நிலையில் நேற்றே கன்னியாகுமரியில் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. இன்று 2-வது நாளாகவும் காலையில் கடல் நீர்மட்டம் தாழ்வு நீடித்தது.

    இதனால் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகியவை சீற்றமாக காணப்பட்டன. சுமார் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

    அதே நேரம் வங்கக்கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அங்கு கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும், பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. இந்த மாற்றங்களை தொடர்ந்து திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் சுற்றுலா போலீசார் 2-வது நாளாக தடை விதித்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்தும தொடங்கப்படவில்லை. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று பகலும் கடலில் அதே நிலை நீடித்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும் பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இன்று கடல் சீற்றம் காரணமாக அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடல் அலை சீற்றத்துடன் பல அடி உயரத்துக்கு எழுந்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் இடமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வட புறமும், தென்புறமும் கடல் நீர் புகுந்தது.

    மீனவர்கள் அங்கு நிறுத்தி இருந்த படகுகளையும் மற்றும் மீன்பிடி வலைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து சென்றனர். இன்று காலையும் கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் கடலின் சீற்றத்தை பார்த்து பயந்து அருகே செல்லாமல் தூரத்தில் இருந்தே பார்த்து ரசித்தனர்.

    கடல் சீற்றம் காரணமாக மாமல்லபுரம், தேவநேரி, நெம்மேலி, சூலேரிக்காடு, வெண்புரு‌ஷம், கொக்கில மேடு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    பலத்த மழை காரணமாக மாமல்லபுரம் கீழராஜவீதி, ஒத்தவாடைதெரு, கலங்கரை விளக்கம் ரோடு போன்ற முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    திருக்கழுகுன்றம் சாலையில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கடம்பாடி, குழிப்பாந்தண்டலம், எச்சூர், பெருமாள் ஏரி, மணமை பகுதியில் வாழை மரங்கள் காற்றில் சாய்ந்தன.

    ×